search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு"

    • சனிக்கிழமை அரசு விடுமுறை என்பதால் பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர்.
    • திருப்பதியில் நேற்று 68,446 பேர் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. மகா சிவராத்திரியை முன்னிட்டு வெள்ளி மற்றும் சனிக்கிழமை அரசு விடுமுறை என்பதால் பக்தர்கள் அதிக அளவில் தரிசனத்திற்காக குவிந்தனர்.

    பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் தங்க வைத்து தரிசனத்திற்கு அனுமதித்தனர்.

    இதனால் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் பக்தர்கள் தரிசனத்திற்காக நீண்ட தூரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 68,446 பேர் தரிசனம் செய்தனர். 28, 549 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.24 கொடி உண்டியல் காணிக்கை வசூலானது. 18 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • கூட்டம் குறைவாக இருந்த கோவை - மன்னார்குடி, கோவை - ராமேஸ்வரம் ரெயில்களிலும் கூட்டம் நிறைந்து வருகிறது.
    • ஜூலை இரண்டாவது வாரம் வரை இதே நிலை தொடரும்.

    திருப்பூர்:

    தமிழகத்தில் ஏப்ரல்-மே மாதங்களில் தேர்வுகள் நடந்ததால், ரெயில் டிக்கெட் முன்பதிவு அதிகரிக்கவில்லை. தற்போது கோடை விடுமுறை நிறைவு பெற உள்ள நிலையில் ரெயில்களில் கூட்டம் அதிகரிக்க துவங்கியுள்ளது. திருப்பூர் வழியாக செல்லும் பெரும்பாலான தொலைதூர ரெயில்களில் முன்பதிவு நிறைவு பெற்று காத்திருப்போர் பட்டியல் நீள்கிறது.

    இது குறித்து ரெயில் டிக்கெட் முன்பதிவு மைய அதிகாரிகள் கூறுகையில், கோவையில் இருந்து சென்னை, பெங்களூரு செல்லும் ரெயில்களில் அடுத்த 10 நாட்களுக்கு முன்பதிவில் இடமில்லை. கூட்டம் குறைவாக இருந்த கோவை - மன்னார்குடி, கோவை - ராமேஸ்வரம் ரெயில்களிலும் கூட்டம் நிறைந்து வருகிறது.

    பீஹார் ,பாட்னா, ஜார்க்கண்ட் தன்பாத், அசாம் திப்ரூகர் மற்றும் புதுடில்லியில் இருந்து தமிழகம் வரும் ரெயில்களின் முன்பதிவு பெட்டி படுக்கை, இருக்கை நிறைந்து, தொங்கியபடி ரெயில்களில் வடமாநிலத்தினர் பயணிக்கின்றனர். ஜூலை இரண்டாவது வாரம் வரை இதே நிலை தொடரும் என்றனர்.

    ×